கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை திங்கற்கிழமை 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள சபை, நாளை காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
இதன்படி, பேலியகொடை, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க/சீதுவ நகர சபைக்குட்பட்ட பகுதிகள், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல, கட்டுநாயக்க, மினுவாங்கொடை மற்றும் கம்பஹா பிரதேச சபையின் ஒரு பகுதிக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.
இலங்கை மின்சார சபையின் சபுகஸ்கந்த துணை மின் நிலையத்தால் விநியோகிக்கப்படும் குழாய்களில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.