நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் பொகவந்தலாவ பகுதியில் ஐந்து வட்டாரங்களில் நான்கு வட்டாரங்களில் இ.தொ.கா.அமோகவெற்றி.
மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் கூறுகிறார் .
2018ம் ஆண்டுக்கான நடைபெற்று முடிந்த உள்ளுராட்சிசபைத் தேர்தலில் பொகவந்தலாவ பகுதியில் மாத்திரம் இலங்கை தொழிலாளர் காங்ரஸ் ஐந்து வட்டாரங்களில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு நான்கு வட்டாரங்களில் இலங்கை தொழிலாளர் காங்ரஸ் அமோக வெற்றியை பெற்றுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்ரசின் உபதலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் குறிப்பிட்டார் .
நடைபெற்று முடிந்த உள்ளுராடசி சபை தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்ரஸ் பொகவந்தலாவ லெச்சுமி கீழ்வட்டாரம், லெச்சுமி மேல்வட்டாரம், லோய்னோன் வட்டாரம்,பொகவானை வட்டாரம் ஆகிய நான்கு வட்டாரங்களில் வெற்றி பெற்றுள்ளதுடன் ஒரு வட்டாரத்தில் மாத்திரம் இலங்கை தொழிலாளர் காங்ரஸ் 20வாக்குகள் வித்தியாசத்தில் நாங்கள் தோல்வியடைந்துள்ளோம். இருந்தாலும் இம் முறை இடம் பெற்ற தேர்தலில் நாங்கள் அமோக வெற்றியினை பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார் .
பொகவந்தலாவ பிரதேசத்தில் தேர்தல் காலங்களில் மாற்றுகட்சியினர் கூறினார்கள் போட்டியிடுகின்ற ஜந்த வட்டாரங்களையும் ஜக்கிய தேசிய கட்சி கைபற்றுமென ஊடகங்களில் அறிக்கை விடுத்திருந்தனர். ஆனால் இறுதியில் நாங்கள் தான் வெற்றிபெற்றோம். ஆனால் இன்று சிலர் 20வாக்குகள் வித்தியாசத்தில் ஒரு தொகுதியை மாத்திரம் வெற்றி பெற்றவர்கள் அறிக்கை விடுகிறார்கள். பொகவந்தலாவ நகரம் எங்களது கோட்டையென பெயர் சூடி கொள்ளுவதாகவும் கூறிப்பிட்டார்.
மலையகத்தில் எத்தனை வருடங்கள் சென்றாலும் இலங்கை தொழிலாளர் காங்ரசையும் அதன் தலைவர் ஆறுமுகன் தொண்டமானையும் என்றுமே மக்கள் மறப்பதில்லை. இலங்கை தொழிலாளர் காங்ரஸ் இம் முறை நுவரெலியா மாவட்டத்தில் 12உள்ளுராட்சி சபைகளில் 11சபைகளில் தனிச்சையாகவும் கூட்டாகவும் ஆட்சியமைக்க போகிறது. ஆட்சியை அமைத்து பிறகு அனைத்து வாழ்மக்களுக்கும் அபிவிருத்திகளை முன்னெடுப்பதில் இ.தொ.கா.தயாரக இருப்பதாக தெரிவித்தார்
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்