பிரதேச பாடசாலையில் தரம் 05புலமை பரீசில் பரீட்சையில் சித்திபெற்றமாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 14.10.2018.ஞாயிற்றுகிழமை பொகவந்தலாவ சென்மேரீஸ் மத்திய கல்லுhரியின் பிரதான மண்டபத்தில் இடம்
பெறஉள்ளது
தொழிலாளர் தேசியசங்கத்தின் இளைஞர் அணியின் தலைவரும் நோர்வூட் பிரதேசசபையின் உறுப்பினருமான பா.சிவநேசனின் வேண்டுகோளுக்கினங்க தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு
மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் பணிப்புரைக்கமைய தேசிய ஒருமைபாடு நல்லினக்கம் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சின் ஊடாக மேற்படி இலவச நடமாடும் சேவை இடம்பெறஉள்ளது
தமிழ் முற்போக்கு கூட்டனியின் தலைவரும் அமைச்சருமான மணோகனேசன் தலைமையில் இடம்பெறும் இந்த இலவச நடமாடும் சேவையில் அடையாள அட்டை பிறப்பு சான்றுதல் பதிவு திருமணசான்றுதல் வழங்கபடுவதோடு பொகவந்தலாவ பகுதியில் ஐந்து கிராமசேவகர் பிரிவுகளான கெர்க்கஸ்வோல்ட் 319ஜீ 319என் பொகவானை 319 லொய்னொன் 319எப் பொகவந்தலாவ 318பி கொட்டியாகல போன்ற பகுதிகளில் உள்ள மக்களுக்கே இந்த இலவச நடமாடும் சேவை மேற்கொள்ள விருப்பதோடு பொகவந்தலாவ பகுதியில் உள்ள புலமை பரீசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும்
கற்பித்த ஆசியர்கள் மற்றும் அதிபர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் இடம் பெற உள்ளது.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர், எஸ். சதீஸ்