பொதுத்தேர்தலை நடத்த கோரி அட்டனில் மக்களிடம் கையெழுத்து திரட்டல்!

0
267

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு நிரந்தரமான தீர்வு ஒன்றை பெறுவதற்காக பொது தேர்தலை நடத்தக் கோரி வழியுறுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு அனுப்புவதற்காக 25.11.2018 அன்று அட்டனில் கையொப்பம் திரட்டும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த கையொப்பம் திரட்டும் நிகழ்வில் அட்டன் டிக்கோயா நகர சபை தலைவர் எஸ்.பாலச்சந்திரன், உறுப்பினர்கள், பிரதேச மக்கள், சமூக அமைப்புகள் என பலரும் கலந்து கொண்டனர்.

பாராளுமன்றத்தை கலைத்து உடனடியாக பொது தேர்தலை நடத்தும்படியும், மக்களின் உரிமையை உறுதி செய்யுமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடதக்கது.

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here