போடைஸ் தோட்டத்தை சேர்ந்த திஹாரிக்கா இந்தியா பயணம்!!

0
241

சர்வதேச புரிந்துணர்வு வேலைத்திட்டத்திற்காக இலங்கையில் இருந்து எதிர்வரும் ஏப்ரல் மாத முதல் வாரத்தில் மூவர் அடங்கிய குழாமினர் இந்தியாவிற்கு பயனமாகின்றனர்..இக்குழுவில் ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான இலங்கையின் இளைஞர் வலையமைப்பின் நுவரெலியா மாவட்ட த்தின் அம்பகமுவ பிரதேச ஒருங்கினைப்பாளராக செயற்ப்படும் டிக்கோயா போடைஸ் தோட்டத்தை சேர்ந்தவரும் போடைஸ் இளைஞர் கழகத்தின் செயலாளரும் நாகேந்திரன் ஜெயரானி ஆகியோரின் மகளுமான திஹாரிக்கா என்பவர் தெரிவாகியுள்ளார்.

இந்தியாவில் Audacious Dreams Foundation என்ற அமைப்பு இவ் வேலைத்திட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளார்கள் என்பதும் இவர்களை இலங்கை – ஐக்கிய நாடுகள் நட்புறவு அமையம் இவ் வேலைத்திட்டத்திற்கு பரிந்துரை செய்துள்ளமையும் குறிப்பிடதக்கது.

இவ் வேலைத்திட்டம் இரண்டு மாத வேலைத்திட்டமாகும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here