போராட்டத்திற்கு ஆதரவளித்த வெளிநாட்டு பிரஜைக்கு ஏற்பட்ட நிலை!

0
172

பிரித்தானிய பிரஜை ஒருவரின் கடவுச்சீட்டு குடிவரவு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது5

சமூக ஊடகங்கள் மூலம் மக்கள் போராட்டம் குறித்த தகவல்களைப் பகிர்ந்ததாகக் குற்றம் சாட்டி, பிரித்தானியப் பிரஜை ஒருவரின் கடவுச்சீட்டை குடிவரவுத் திணைக்களம் கைப்பற்றியுள்ளது.

விசா நிபந்தனைகளை மீறியதற்காக அவரது கடவுச்சீட்டு காவலில் வைக்கப்பட்டதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, விசாரணைக்காக 07 நாட்களுக்குள் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு வருகை தருமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையின் பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குடிவரவு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Kayleigh Fraser என்ற இளம் பெண், இன்ஸ்டாகிராம் மூலம் மக்களின் போராட்டம் குறித்த தகவலை பதிவிட்டிருந்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here