மக்களுடனான என் இதயபூர்வமான பிணைப்பை உடைக்க முயன்றால் அது மேலும் வலுவடையும்!

0
29
நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதையை அடிப்படையாகக் கொண்ட மக்களின் அன்பு இலாப நோக்கங்களுக்கு அப்பாற்பட்டது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகபூர்வ பேஸ்புக் வலைத்தளத்தில், தமது வாழ்நாளின் பெரும்பகுதியை மக்களிடையே கழித்ததால், மக்களின் அன்பை நன்கு அறிந்திருப்பதாக அவர் பதிவேற்றம் செய்துள்ளார்.

இதன் காரணமாக, அதன் மதிப்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மேலும் அதிகமாகி உள்ளது எனவும், இது ஓர் அரசியல் உறவு மட்டுமல்ல, கடினமான ஓர் இதயபூர்வமான பிணைப்பு என்றும் அந்தப் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, அவற்றை உடைக்கும் முயற்சிகள் மூலம் இன்னும் அதிகமான பிணைப்புகளை வலுப்படுத்த முடியும் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் ஜனாதிபதி, மக்களுடன் செலவிடும் இந்த நேரம் முழுவதும் ஒரு தலைவராகத் தான் பெறக்கூடிய மிகப் பெரிய மகிழ்ச்சியை அனுபவிப்பதாகவும் பதிவேற்றம் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here