கடந்த இரு தினங்களுக்கு முன்னர் காணாமல் கிரான்குளத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி இன்று ஞாயிற்றுக்கிழமை (03) மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகிலுள்ள தேவாலயத்துக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
கிரான்குளத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியான ஜயாத்துரை பத்மநாதன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கூலி தொழிலை மேற்கொண்டுவரும் குறித்த நபர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வழமைபோல வேலைக்காக வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் மீண்டும் வீடு திரும்பாத நிலையில் அவரை உறவினர்கள் தேடிவந்தனர்.
இந்த நிலையில் குறித்த நபர் கல்லடி பாலத்துக்கு அருகாமையிலுள்ள தேவாலயத்துக்கு அருகில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளாதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நீதிமன்ற அனுமதியை பெற நடவடிக்கையை முன்னெடுத்துவருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.