மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பொத்துஹெரவிலிருந்து ரம்புக்கனை வரையிலான பகுதியின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி செய்தியில், இந்த நோக்கத்திற்காக பல பகுதிகளில் நிலம் தயார் செய்யும் பணிகள் ஏற்கனவே இறுதி கட்டத்தில் இருப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
பொத்துஹெரவிலிருந்து ரம்புக்கனை வரையிலான பகுதியின் நிர்மாணப் பணிகள் 2027 ஜனவரிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை கூறியுள்ளது.