மனைவியுடன்கோபம்: விஷம் கொடுத்து குடித்த கணவன்_ கம்பளையில் சம்பவம்

0
88

எவ்வளவு எடுத்துரைத்தும் தன்னுடைய மனைவி, தனக்கு சொல்லாமல், கொழும்புக்குச் சென்றதை அடுத்து கடும் கோபமடைந்த அவருடைய கணவன், தன்னுடைய இரண்டு பிள்ளைகளுக்கும் உணவில் விஷத்தை கலந்து கொடுத்துவிட்டு, தானும் விஷ உணவை உண்ட சம்பவம் கம்பளையில் இடம்பெற்றுள்ளது.

விஷம் கலந்த உணவை உட்கொண்ட மூவரும் அசாதாரண நிலையில், கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பூண்டுலோயா ஹெரொஹ்ட் பகுதியிலேயே இச்சம்வம் இடம்பெற்றுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், அம் மூவரையும் மீட்ட பொலிஸார், அவர்களை கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here