மனைவியை கொன்று விட்டு கணவனும் தற்கொலை.!

0
143

சிலாபம் – தங்வெல பகுதியில் மனைவியின் தலையை வெட்டி கொடூரமாக கொலை செய்து விட்டு கணவனும் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

கொஸ்வத்த பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இன்று கணவன்,மனைவி ஆகிய இருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சம்பவத்தில் உயிரிழந்த பெண் 60 வயதானவர் என்பதுடன், உயிரை மாய்த்துக்கொண்டவர் 65 வயதானவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here