மருதானை பகுதியில் இன்று (27) மாலை நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் மொத்தம் 30 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் தேடப்படும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களும் அடங்குவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சோதனை நடவடிக்கைகளில் இலங்கை இராணுவமும் பங்கேற்றுள்ளது.




