மலையகத்தில் முருகன் ஆலயத்தில் குமாரலாயதீபம் இன்று சிறப்பாக நடைபெற்றது.

0
174

கார்திகை தீபத்தினை முன்னிட்டு நேற்று வீடுகளிலும் முருகன் ஆலயம் தவிர்ந்த ஏனைய ஆலயங்களிலும் சிறப்பாக நேற்று (18) அனுஸ்டிக்கப்பட்டன.
மலையக ஆலயங்களில் குமாரலாய தீபம் இன்று (19) ம் திகதி மிக சிறப்பாக நடைபெற்றன.

குமாரலாய தீபத்தினை முன்னிட்டு  நுவரெலியா மாவட்டத்தின் மிகவும் பிரத்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான ஹட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளும் சொக்கப்பணை எரிக்கும் நிகழ்வும் ஆலய பிரதம குரு பாலசுப்பிரமணியம் சர்மா தலைமையில் நடைபெற்றது.

விநாயகர் வழிபாடு, அலங்காரப்பூஜை , வசந்த மண்டப பூஜை ஆகிய இடம்பெற்று அதனைத் தொடர்ந்து சுவாமி உள்வீதி வலம் வந்து சொக்கப்பணை எரிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. சுகாதாரப் பொறிமுறைக்கு அமைய நடைபெற்ற இப்பூஜை வழிபாடுகளில் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.

கே.சுந்தரலிங்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here