மலையக மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு டயகமவில் இடம்பெற்றது.மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்ற இம்மக்கள் சந்திப்பில் நாட்டின் தற்போதைய நிலை,தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சனை,தோட்ட நிர்வாகங்களின் கெடுபிடிகள்,வீட்டுத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பில் மலையக மக்கள் முன்னணியின் பிரதி தலைவரும் முன்னாள் மத்தியமாகாண சபை உறுப்பினருமான ராஜாராம்,மலையக தொழிலாளர் முன்னணியின் பதில் பொதுச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன்,மலையக தொழிலாளர் முன்னணியின் நிதிச்செயலாளர் தாளமுத்து சுதாகரன்,மலையக தொழிலாளர் முன்னணியின் பிரதி பொதுச்செயலாளர் சிவஞானம் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்




