மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் 1008 இலக்க பயணிகள் ரயிலின் இயந்திரம் நேற்று (09) தடம் புரள்வுக்கு உள்ளாகி இருந்தமையால் மலையக ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.