மவுஸ்ஸாக்கலை நீர்தேகத்தில் உள்ள குப்பைகளை சேகரிக்கும் வேலைத்திட்டம்!!

0
179

மஸ்கெலியா மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தில் குப்பைகள் அதிகரிக்கப்பட்டு சூழல் மாசடைவு ஏற்பட்டதனாலும் களனி கங்கைக்கு செல்லும் இந்த நீரில் மாசு தன்மை ஏற்பட்டுள்ளதாலும், இந்த மவுஸ்ஸாக்கலை நீர்தேகத்தில் கரையோர பகுதிகள் மற்றும் நீரேந்தும் பகுதிகளில் நிரம்பி இருக்கும் குப்பைகளை சேகரிக்கும் வேலைத்திட்டம் ஒன்று 20.08.2018 அன்று முன்னெடுக்கப்பட்டது.இவ் வேலைத்திட்டத்தினை மஸ்கெலியா பொலிஸார் மற்றும் மஸ்கெலியா சிவில் அமைப்பினர், கடற்படையினர், இராணுவத்தினர், கெனியன் நீர்தேக்கத்தின் பொறியியலாளர் ஆகியோர் ஒன்றினைந்து மேற்கொண்டனர்.

இதன்போது நீர்தேகத்தின் கரையோர பகுதியில் துர்நாற்றத்தை வீசக்கூடிய நிலையில் காணப்பட்ட குப்பைகளை அகற்றும் பணி விறுவிறுப்பாக முன்னெடுக்கப்பட்டது. அதேவேளை எதிர்வரும் காலத்தில் மவுஸ்ஸாக்கலை நீரேந்தும் பகுதிகளிலும் நீர் உள்வாங்கும் பகுதிகளிலும் காணப்படும் நீர் ஓடைகளில் கழிவுகளை கொட்ட வேண்டாம் என பொதுமக்களிடம் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

DSC06837

மேலும், இவ்வாறான வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக ஏற்பாடுக்குழுவினர் தெரிவித்தனர்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here