மஹிந்த அணி எம்பிக்களின் தாக்குதலுக்கு உள்ளான பா.உறுப்பினர்கள், காவல்துறையினர்கள்….

0
180

நாடாளுமன்றத்தில் இன்று நடந்த குழப்பங்களின் போது, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் காமினி ஜெயவிக்ரம பெரேரா மீது மகிந்த ராஜபக்ச அணியைச் சேர்ந்த உறுப்பினர்கள், மிளகாய்த் தூளை வீசித் தாக்குதல் நடத்தினர்.

இதனால், முகம் மற்றும் உடற்பகுதிகளில் மிளகாய்த் தூள் வீசப்பட்ட நிலையில் அவர் ஏனைய உறுப்பினர்களால் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார்.

அதேவேளை மகிந்த அணியினரின் மிளகாய்த் தூள் வீச்சு மற்றும் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களான காமினி ஜெயவிக்ரம பெரேரா, விஜித ஹேரத், மலிக் சமரவிக்ரம ஆகியோர் நாடாளுமன்ற மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றுள்ளனர்.

மேலும் காவல்துறையினர்கள் மீதும் மஹிந்த தரப்பினர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here