புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தனது ஆதரவை தெரிவித்துள்ளதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
எனினும் இது பொய்யாக புனையப்பட்ட செய்தி என்பது உறுதியாகியுள்ளது.
இன்று அலறி மாளிகையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தனது ஆதரவை நேரடியாக ரணிலுக்கு தெரிவித்தார்.
மேலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் தான் இணைந்ததாக கருத்து வெளியிட்ட ஊடக நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பேன் எனவும் அவர் கூறியுள்ளார்.