வவுனியா பொது வைத்தியசாலையில் இவ்வாண்டு ஜனவரி முதல் ஒக்டோபர் வரையுமான 10 மாத காலப்பகுதியில் மாரடைப்பால் 45 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக கோரப்பட்ட தகவலுக்கு அமைய குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் பிரகாரம், 20 வயது தொடக்கம் 40 வயது வரையானவர்களில் ஒருவரும்,
40 தொடக்கம் 60 வயதுடையவர்களில் 13 பேரும்,60 தொடக்கம் 100 வவயதுடையவர்களில் 31 பேரும் என 45 பேர் இவ்வாறு மாரடைப்பால் மரணமாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக வவுனியாவில் மாரடைப்பால் மரணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.