மின்கட்டண உயர்வு : பாடசாலைக்கு செல்வதை நிறுத்திய ஒரு இலட்சம் மாணவர்கள்

0
187

மின்கட்டண உயர்வால் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த குடும்பங்களின் சுமார் ஒரு லட்சம் குழந்தைகள் பாடசாலைக்கு செல்வதையே நிறுத்தியுள்ளதாக பொருளாதார நாடாளுமன்ற துறைசார் கண்காணிப்பு குழுவில் தெரியவந்துள்ளது.

மின்கட்டண உயர்வுக்கு அனுமதி அளித்த பொதுப் பயன்பாட்டு ஆணையமே அதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டது.மேலும், மின்கட்டண உயர்வு காரணமாக கடந்த ஆண்டில் சுமார் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக பொருளாதார நெருக்கடியின் பாதிப்பைத் தணிக்கும் நாடாளுமன்றத் துறைக் கண்காணிப்புக் குழுவில் தெரியவந்துள்ளது.

கைத்தொழில் அமைச்சு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மின்சார சபை, நிதியமைச்சு, இலங்கை மத்திய வங்கி மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகள் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணிக்கும் நாடாளுமன்றத் துறை மேற்பார்வைக் குழுவின் முன் நேற்று (22) அழைக்கப்பட்டனர்.

மின் கட்டண உயர்வு காரணமாக 2023 டிசம்பர் 31ஆம் திகதிக்குள்நாடு முழுவதும் 1,069,000 மின்துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக அங்கு தெரியவந்துள்ளது.இதில் வீடுகள், தொழிற்சாலைகள், மத ஸ்தலங்கள் மற்றும் பாடசாலைகள் அடங்கும்.இதன் காரணமாக, அந்த ஆண்டில் சுமார் 214,000 தொழிற்சாலைகள் நிரந்தரமாக மூடப்பட்டதாக தெரியவந்துள்ளது.

மேலும் 50,000 தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில், அடுத்து என்ன செய்வது என்பது குறித்து அந்த தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here