மின் தூக்கி உடைந்து வீழ்ந்ததில் 26 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழப்பு.

0
176

கடுகன்னாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிலிமத்தலாவ பகுதியில் கட்டிடம் ஒன்றின் மின் தூக்கி உடைந்து வீழ்ந்ததில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

பொலித்தீன் பைகள் மற்றும் அரிசி மூட்டைகள் தயாரிக்கும் மூன்று மாடிகளை கொண்ட கட்டிடத்தின் மின்தூக்கியே இவ்வாறு உடைந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனர்த்தத்தினால் காயமடைந்த மற்றொரு பெண் சிகிச்சைக்காக பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம் விபத்தில் உயிரிழந்தவர் பலன பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here