தமிழக முதல்வரிடம் பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ள நளினி மற்றும் முருகன்.

0
201

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் எழுவர்களில் நளினி மற்றும் முருகன் இருவரும் 30 நாட்கள் பரோல் கேட்டு தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பிள்ளனர்.

நளினி மற்றும் முருகன் ஆகியோர் தனித்தனியாக வேலூர் மத்திய சிறைக்காவலர் ருக்குமணி பிரியதர்ஷினியிடம் 30 நாட்கள் பிணை கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

இதில் நளினி சென்னையில் உள்ள தனது தாயார் பத்மா முதுமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவரின் அருகில் இருந்து கவனித்து கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் இலங்கை நாட்டில் வசித்த தனது மாமனாரும், முருகனின் தந்தையுமான வெற்றிவேல் இறந்து ஓராண்டு ஆகி இருப்பதால் அவருக்கு செய்ய வேண்டிய சடங்குகளை செய்யவும் எனக்கும், கணவர் முருகனுக்கும் 30 நாட்கள் பிணை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

முருகனின் தந்தை வெற்றிவேல் கடந்த வருடம் இறந்தபோது இறுதிச்சடங்கு செய்வதற்காக பிணையில் செல்ல அனுமதி கேட்டும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here