மீண்டும் முடக்கப்படுமா நாடு? இன்று முக்கிய தீர்மானம்….

0
208

ஆகக் குறைந்தது 4 நாட்களுக்கு நாடு முழுவதும் முடக்க நிலையை அமுல்படுத்தி கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொது சுகாதார பரிசோதக சங்கத்தினர் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.

முடக்க நிலை தொடர்பான கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாகவும்,இன்று மாலை ஜனாதிபதியுடனான விசேட கலந்துரையாடலை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பிற்கு கொவிட் -19 பரவலை கட்டுப்படுத்தும் செயற்கபாட்டில் ஈடுபட்டுள்ள அனைத்து பிரிவினரும் தொற்று நோயியல் விசேட வைத்தியர்களின் குழாமினரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

தமது கோரிக்கைக்கு ஜனாதிபதியிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கப்பெறும் என  உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது அதிகரிக்கும் கொரோனா பரவலை கருத்திற்கொண்டு பொதுமக்கள் அவதானமாக செயற்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here