முட்டைகளை கழுவிய பின் சேமித்து வைப்பது நுகர்வுக்கு பாதுகாப்பற்றது என்று பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
முட்டைகளை கழுவுவதன் மூலம், முட்டைகளின் மேற்பரப்பில் உள்ள கிருமிகள் முட்டைகளுக்குள் செல்லக்கூடும் என்று சங்கத்தின் தலைவர் புலினா ரணசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“முட்டை ஓடு முழுமையாக மூடப்படவில்லை. இது மிக நுண்ணிய துளைகளைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக, முட்டையைக் கழுவும்போது, மேற்பரப்பில் உள்ள அழுக்கு, தூசி மற்றும் விலங்குகளின் கழிவுகள் தண்ணீரில் கரைந்து முட்டையின் உள்ளே நகர கூடும்
முட்டையின் உள்ளே புரதம் நிறைந்த ஒரு ஊடகம் உள்ளது. நுண்ணுயிரிகள் அதில் நுழைந்தால், அது விரைவாக வளர்ந்து நச்சு நிலைமைகளை ஏற்படுத்தும். எனவே கழுவிய பின் முட்டைகளை சேமிக்க முடியாது.
முட்டை உற்பத்தி செயல்பாட்டின் போது, அழுக்கு, தூசி மற்றும் கழிவுகளைக் கட்டுப்படுத்த நல்ல தரக் கட்டுப்பாட்டு முறை பின்பற்றப்படும்.எனவே முட்டைகளை கழுவி சேமிப்பதை தவிர்க்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.