முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஓய்வூதியம் அதிகரிக்கப்பட வேண்டும்!

0
2

முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய ஓய்வூதியம் இரத்து செய்யப்படக்கூடாது. தற்போது வழங்கப்படும் தொகை அதிகரிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” உலகில் பலம்பொருந்திய, அபிவிருத்தி அடைந்து வரும் மற்றும் வறுமை நாடுகளில்கூட முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அவர்களின் ஓய்வுகாலத்தில் வரப்பிரசாதங்கள் வழங்கப்பட்டுவருகின்றன. எனவே, இலங்கையில் இவற்றை நீக்குவதற்கு முற்படாமல், இந்நாட்டில் செய்ய வேண்டிய பல விடயங்கள் உள்ளன. அவற்றை செய்ய வேண்டும்.

எனினும், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் மாளிகைகளை மீளப்பெறுவதில் தவறு கிடையாது.
முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதியத்தை நீக்க முடியாது. அது அரசமைப்பில் உள்ள விடயம். தற்போது வழங்கப்படும் தொகை அதிகரிக்கப்பட வேண்டும். அத்துடன், பணியாள் தொகுதி மற்றும் பாதுகாப்பு என்பன வழங்கப்பட வேண்டும்.” – என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here