முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் சிஐடிக்கு அழைப்பு!

0
3

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திற்கு நாளை செவ்வாய்க்கிழமை (05) அழைக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி நிதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டுப் பயணம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளரான சமன் ஏக்கநாயக்க குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளரான சாண்ட்ரா பெரேரா குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திற்கு இன்று திங்கட்கிழமை (14) அழைக்கப்பட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here