மூதூர் பகுதியில் கால்வாயிலிருந்து சடலம் மீட்பு!

0
10

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூதூர் சந்தைக்கு பின்புறமாகவுள்ள வாய்க்காலினுள் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர் மூதூர் பாலநகரைச் சேர்ந்த 43 வயதுயவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர் இன்று புதன்கிழமை (30) அதிகாலை 2.00 மணியளவில் மீன்பிடிக்க சென்றதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்வம் குறித்து மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here