நூறு கணிணி மையங்களை உருவாக்குதல் எனும் தொனிப்பொருளில் இனியாவது நமக்காக நாம் அமைப்பின் மூன்றாவது கணிணி மையம் நுவரெலியா மத்திய பிரிவில் 04/02/2022 வெள்ளிக்கிழமை சுதந்திரதினத்தன்று திறந்து வைக்கப்பட்டது.
இனியாவது நமக்காக நாம் அமைப்பின் தலைவர் ஆறுமுகம் சுதர்ஷன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யுவராஜ் சர்மா,அமைப்பின் அமைப்பாளர் விஜயரத்னம் நேசன்,இயக்குனர் தயாளன் ஆகியோரின் பங்களிப்போடு குறித்த கணிணி கல்வி மையம் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வின் போது ஒலிபண்ட் பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட தோட்ட பொதுமக்களும் கலந்துக்கொண்டமை குறிப்பிடதக்கது.
நீலமேகம் பிரசாந்த்



