மூன்றாவது நாளாக கப்பலில் எரியும் தீயை அணைக்க போராட்டம்!

0
8

கேரளாவின் கோழிக்கோடு அருகே நடுக்கடலில் கப்பலில் எரியும் தீயை அணைக்க 3ஆவது நாளாக தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

1,754 கொள்கலன்களுடன் உள்ள கப்பல் தீப்பற்றி எரிந்து வந்தாலும் இதுவரை மூழ்கவில்லை. கப்பலின் மேற்புறத்தில் 671 கொள்கலன்களும் , அடிப்புறம் 1,083 கொள்கலன்களும் உள்ளன. 2 ஆயிரம் தொன் எண்ணெய், 240 தொன் டீசல் உள்ளதால் தீ பரவி கப்பல் முழுமையாக எரியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here