கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூன்று பேரை தலா 2.5 மில்லியன் ரூபாய் சொந்த பிணை மற்றும் 2,00,000 ரூபாய் ரொக்கப் பிணையில் விடுவிக்க கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி டபிள்யூ.கே.டி. விஜேகோன் உத்தரவிட்டுள்ளார்.