மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் மூன்று திறந்து விடப்பட்டுள்ளது!!

0
167

மலையகத்தில் காலநிலை சீர்கேட்டின் காரணமாக பெய்து வரும் அடை மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் 14.08.2018 அன்று காலை வான்கதவு ஒன்று திறக்கப்பட்ட நிலையில் நீரின் உயர் மட்டம் வெகுவாக கூடுவதனால் 15.08.2016 அன்று காலை மேலதிகமாக இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அத்தோடு மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டதன் காரணமாக சென் கிளயார் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளமையும் குறிப்பிட்டதக்கது.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here