மைத்திரியின் மன்னிப்பை அடியோடு நிராகரித்தது கத்தோலிக்க திருச்சபை

0
205

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன மன்னிப்புக் கோரியதை கத்தோலிக்க திருச்சபை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என அருட் தந்தை ஜூட் கிருஷாந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் அதிபர், தனது ஆட்சிக்காலத்தில் இவ்வாறானதொரு அனர்த்தம் இடம்பெற்றமைக்காக மன்னிப்புக் கோரினார்.

“கத்தோலிக்க சமுகம் என்மீது வெறுப்பு கொள்ளவில்லை. எனது 15 ஆவது வயதில் பைபிள் படித்தேன். மற்றவர்கள் செய்த தவறால் இன்று இழப்பீடு கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனது பதவிக் காலத்தில் இது போன்ற சம்பவம் நடந்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

“வழக்கின் மீதான நீதிமன்றத் தீர்ப்பில் தான் குற்றம் செய்ததாகக் கூறவில்லை என்றார். “அதிபரால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் ஏதேனும் கடுமையான தவறு செய்தால், அந்த தவறுக்கு அதிபரே பொறுப்பேற்க வேண்டும். அதுதான் இந்த வழக்கிற்கும் எனக்கும் உள்ள தொடர்பு” என்றார்.

இந்த நிலையில், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் கத்தோலிக்க சமூகத்திடம் இருந்து முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேன மன்னிப்பு கோரியதை கத்தோலிக்க திருச்சபை ஏற்றுக்கொள்ளாது என சமூக தொடர்புக்கான தேசிய கத்தோலிக்க பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here