‘மொட்டு’ வின் மாநாட்டுக்கு மக்களை அழைத்துவர மறுத்த பேருந்து உரிமையாளர்கள்:

0
143

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய மாநாடு இன்று கொழும்பில் நடைபெற உள்ளது.

இன்று பிற்பகல் 2.00 மணிக்கு மாநாடு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமாக உள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அக்கட்சி மக்களை கொழும்புக்கு அழைத்து வருகிறது.

இந்நிலையில், இந்த மாநாட்டிற்காக சில பேருந்து உரிமையாளர்கள் தமது பேருந்துகளை வாடகைக்கு வழங்க மறுத்துள்ளனர். 2022ஆம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது பல பேருந்துகளுக்கு சேதம் ஏற்பட்டமையே இதற்குக் காரணம் என தெரிய வருகிறது.

இதனால், கொழும்புக்கு மக்களை அழைத்துவருவதில் அக்கட்சி நெருக்கடியை சந்தித்துள்ளது.

மக்களை அழைத்துவர பேருந்து உரிமையாளர்கள் மறுத்துள்ளதால் அக்கட்சியின் தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாகவும் அறிய முடிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here