மலையக மக்கள் முன்னணியின் கிளைக்காரியாலயம் மஸ்கெலியா நகரில் உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஸ்ணன் தலைமையில் குறித்த காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது.
மஸ்கெலியா பகுதியில் காணப்படுகின்ற மக்களின் பிரச்சனைகள் மற்றும் தோட்டத்தொழிலாளர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இக்கிளைக்காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது




