பேராதனை – யஹலதென்ன பகுதி வீடொன்றில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட மூன்று சடலங்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 52 வயதான யட்டிநுவர பிரதேச சபையின முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் எனவும் ஏனையவர்கள் அவரது
மனைவி மகள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஏனையவர்களான மனைவி (44 வயது) மகள் (17 வயது) எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆண் தற்கொலை செய்து கொண்டதற்கான அடையாளங்கள் தென்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், தாய் மற்றும் மகளின் மரணம் தொடர்பில் விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் பேராதனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.