யாழில் டீசல் குடித்த குழந்தை உயிரிழப்பு

0
19

யாழ்ப்பாணத்தில் டீசலை குடித்த ஆண் குழந்தை ஒன்று நேற்று சனிக்கிழமை (22) அதிகாலை உயிரிழந்தது.

ஊர்காவற்துறை, நாரந்தனை தெற்கு பகுதியைச் சேர்ந்த ஒரு வயது 9 மாதமான குழந்தையே உயிரிழந்துள்ளது.

கடந்த 18ஆம் திகதி குழந்தையின் தந்தை லாண்ட்மாஸ்டர் திருத்த வேலையில் ஈடுபட்டுள்ளார். அப்போது டீசலை ஒரு போத்தலில் வைத்துவிட்டு சென்றுள்ளார்.

இதன்போது அவ்விடத்திற்கு வந்த குழந்தை சோடா என நினைத்து டீசலை குடித்துள்ளது. இதனால் குழந்தை மயக்கமுற்ற குழந்தை ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 2.30 மணியளவில் உயிரிழந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here