யாழில் பற்றைக்காடொன்றில் இருந்து 23 மில்லியன் ரூபாய் பெறுமதியான கஞ்சா கைப்பற்றல்!

0
6

யாழ்ப்பாணத்தில் பற்றைக்காடொன்றில் இருந்து சுமார் 23 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் கஞ்சா பொதிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் கடற்படையினர் திங்கட்கிழமை (04) மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகளின் எடை சுமார் 103 கிலோ (ஈரமான எடை) எனவும் அவற்றின் பெறுமதி சுமார் 23 மில்லியன் ரூபாய் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கஞ்சா பொதிகளை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here