யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் 18 வயதான இளைஞன் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குருநகர் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 110 மில்லிகிராம் ஹெரோயின், 30 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 18,22,23 வயதுடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.