யாழில் விசர் நாய் கடித்து இளைஞன் உயிரிழப்பு!

0
99

யாழ்ப்பாணம், ஆவரங்கால் பகுதியில் விசர் நாய் கடித்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். ஆவரங்கால் கிழக்கு, புத்தூரைச் சேர்ந்த பிரதாபன் ஷாலமன் என்ற 23 வயதான இளைஞரே உயிரிழந்தார்.

சில தினங்களுக்கு முன்னர் நாய் கடித்து இய லாமைக்குள்ளான மேற்படி இளைஞர் அச்சுவேலி பிரதேச வைத்தி யசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச் சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத் தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிழந்தார். உடற்கூற்றுப் பரிசோதனையில் விசர் நாய் கடித்தே இளைஞர் உயிரிழந்தார் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது .

அந்த இளைஞரைக் கடித்த விசர் நாய் வேறு யாரையும் கடித்திருக்கலாம் எனக் கருதப்படுவதால் அப்பகுதியில் அண்மையில் நாய்க்கடிக்கு உள்ளானோர் வைத்தியசாலையை நாடு வது சிறந்தது என்று அச்சுவேலி பிர தேச வைத்தியசாலை பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here