தமிழில் வெளியான ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, தனுஷுடன் ‘பட்டாஸ்’, வசந்த் ரவியின் ‘இந்திரா’ ஆகிய படங்களில் நடித்திருப்பவர் மெஹ்ரின் பிர்ஸாடா. இப்போது தெலுங்கு படங்களில் நடித்து வரும் அவர், ரகசியமாகத் திருமணம் கொண்டதாக வதந்தி பரவி வந்தது. இதுபற்றி அவருடைய விக்கிப்பீடியாவிலும் மர்ம நபர்கள் பொய்யானத் தகவலை குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் நடிகை மெஹ்ரின் பிர்ஸாடா அதை மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த 2 ஆண்டுகளாக இது போன்ற வதந்திகள் என்னைப் பற்றி வந்து கொண்டிருக்கின்றன. இவ்வளவு நாள் மவுனமாக இருந்தேன். ஆனால் தொடர்ச்சியான தொல்லைகள் காரணமாக இப்பதிவை எழுதுகிறேன். யாரோ முகம் தெரியாத ஒருவரை நான் திருமணம் செய்துகொண்டதாகப் போலியான கட்டுரை வெளியானது.




