விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடிக்கும் படத்துக்கு ‘ரணபாலி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
‘கீதகோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ படங்களுக்குப் பிறகு இருவரும் ஜோடி சேரும் படம் இது. இதை ராகுல் சங்கிருத்யன் இயக்குகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இதில் ‘தி மம்மி’ படம் மூலம் பிரபலமான அர்னால்ட் வோஸ்லூ, சர் தியோடோர் ஹெக்டர் என்ற பிரிட்டீஷ் அதிகாரியாக நடிக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.




