‘ரண​பாலி’​யில் 1850-களில் நடந்த உண்மை சம்பவங்கள்!

0
47

விஜய் தேவர​கொண்​டா, ராஷ்மிகா மந்​தனா நடிக்​கும் படத்துக்கு ‘ரண​பாலி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

‘கீதகோவிந்​தம்’, ‘டியர் காம்​ரேட்’ படங்​களுக்​குப் பிறகு இருவரும் ஜோடி சேரும் படம் இது. இதை ராகுல் சங்கிருத்யன் இயக்​கு​கிறார். மைத்ரி மூவி மேக்​கர்ஸ் தயாரிக்​கும் இதில் ‘தி மம்​மி’ படம் மூலம் பிரபல​மான அர்னால்ட் வோஸ்​லூ, சர் தியோடோர் ஹெக்​டர் என்ற பிரிட்​டீஷ் அதி​காரி​யாக நடிக்​கிறார். நீரவ் ஷா ஒளிப்​ப​திவு செய்​கிறார்.

“1850-களில் நடந்த உண்மை சம்​பவங்​களை அடிப்படையாகக் கொண்ட படம் இது. இந்த சம்பவங்களை நீங்​கள் வரலாற்று புத்​தகங்​களில் காண முடி​யாது. 1850–1900 கால​கட்​டத்​தில் நிகழ்ந்த சம்​பவங்​கள், பிரிட்​டிஷ் காலத்​தில், திட்​ட​மிட்டு வரலாற்​றில் தவறாகச் சித்​தரிக்​கப்​பட்​டது. அந்த விஷ​யங்​களை இந்​தப் படம் பேசும். இது வாழ்க்கை வரலாற்​றுப் படம் அல்ல.

பல உண்​மைச் சான்​றுகள், வாய்மொழி வரலாறுகள், காலப்​போக்​கில் ஒடுக்​கப்​பட்ட ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு சினி​மா​வாக மீள் உரு​வாக்​கம் செய்​கிறோம்” என்​கிறது படக்​குழு. இப்​படம் செப்​.11-ல்​ வெளி​யாக இருக்​கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here