முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நெருங்கிய வட்டத்திற்குள், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே புதிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து தற்போது பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகக் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் கம்பஹா ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளருமான வருண ராஜபக்ஷ, கூறியுள்ளார்.
YouTube இல் ஒரு அறிக்கையை வெளியிட்ட ராஜபக்ஷ, ஆளும் தேசிய மக்கள் சக்தியை (NPP) பிரதிநிதித்துவப்படுத்தும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரையாடலில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ராஜபக்ச தனிநபர்களின் பெயர்களைக் குறிப்பிடுவதை தவிர்த்து கொண்டாதாலும், அரசியல் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், பல மாவட்டங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த சந்தர்ப்பத்தில் பங்கேற்கின்றனர் என்பதை உறுதி செய்ய நம்பகமான தகவல்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறியுள்ளார்.