லயன் அறைகளில் வசிக்கும் மக்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக வலுப்படுத்தங்கள்!

0
40

நமது நாட்டின் தேசிய தேயிலை உற்பத்தியில் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் அன்னளவாக 60% ஆன பங்களிப்பைப் பெற்றுத் தருகின்றனர். தேயிலைத் தோட்ட காணிகளில் 30% அல்லது 40% ஆனவையே இவர்களுக்கு உரித்துடையதாக காணப்படுகின்றன. சிறிய அளவிலான காணிகளை வைத்திருப்பவர்கள் பெரும் பங்களிப்பைப் பெற்றுத் தரும்போது, பெரும் காணி உரிமைகளை வைத்திருக்கும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் அல்லது தனியாருக்குச் சொந்தமான எஸ்டேட் நிறுவனங்கள் குறைவான பங்களிப்பையே வழங்கி வருகின்றன. இன்னும் லயன் அறைகளில் கஷ்டப்படும் மக்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றி, அவர்களுக்கு மூலதனத்தைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம், பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம். ஒரு வீடு போலவே, செய்கைகளுக்கான காணியும் கிடைக்கும். இவ்வாறு மேற்கொண்டால் அவர்களின் சம்பளப் பிரச்சினைக்குக் கூட இதனால் தீர்வு கிட்டும். பயன்படுத்தப்படாத காணிகளை இவர்களுக்குப் பெற்றுக் கொடுத்து, பெரும் எண்ணிக்கையிலான சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களை உருவாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கௌரவ ஹெக்டர் அப்புஹாமி தலைமையிலான சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அண்மையில் கூடியது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

🟩 தென்னை கைத்தொழில் தற்போது பல கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. தயவுசெய்து இந்த வரவுசெலவுத் திட்டத்திலாவது இவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுங்கள்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி

தென்னை கைத்தொழில் பல கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. ஒரு காலத்தில், தென்னைத் தொழில் முயற்சியாளர்கள் நஷ்டத்தைச் சந்திக்கும் போது, மற்றொரு காலத்தில், அதிக விலை காரணமாக நுகர்வோர் பாதிப்புக்களைச் சந்தித்து வருகின்றனர். மேலும் பல நோய்களும் அதிகரித்து காணப்படுகின்றன. ஆகையால் இது தொடர்பான புதிய திட்டங்களை, புதிய வரவுசெலவுத் திட்டத்தில் முன்வைக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி் வேண்டுகோள் விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here