பொலிஸ் அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் வசந்த முதலிகே உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்
வசந்த முதலிகே உள்ளிட்ட 7 பேரை இன்று மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
பல கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்களினால் களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் நேற்றையதினம் (18) நடைபெற்ற போராட்டத்தின் போது பொலிஸ் அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்தது, கலவரத்தில் ஈடுபட்ட காரணங்களின் அடிப்படையில் வசந்த முதலிகே உள்ளிட்ட 7 பேரை பொலிஸார் கைது செய்தனர்.