வரவு செலவுத் திட்டம் 114 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

0
19

2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் நேற்று (21) 114 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

நேற்று பி.ப 7.40 க்கு வாக்கெடுப்பு ஆரம்பமானது. ஆதரவாக 159 வாக்குகளும், எதிராக 45 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கமைய 2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் 114 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

2025 ஆம் நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது ‘வரவுசெலவுத்திட்ட உரை’ நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களினால் கடந்த 17ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பெப்ரவரி 18ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை 7 நாட்கள் வரவுசெலவுத் திட்டம் மீதான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் இடம்பெற்றது. இரண்டாவது மதிப்பீடு 109 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதன் பின்னர் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் நேற்று மார்ச் 21ஆம் திகதி வரை வரவுசெலவுத் திட்டம் மீதான குழு நிலை விவாதம் இடம்பெற்றது.

பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட 2025 நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் அரசியலமைப்பின் 79 வது உறுப்புரைக்கு அமைய சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன கையொப்பமிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here