டயகம சிறுமி ஹிஷாலினியின் உயிரிழப்பு தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர்கள் நால்வரையும் கொழும்பு புதுக்கடை இலக்கம் 2 நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 9 ஆம் திகதி வரை சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அத்துடன் புதிய பிரேத பரிசேதனைகளை மேற்கொள்வதற்காக விஷாலினியின் உடலை தோண்டி எடுக்க நீதிமன்றத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.