வெளிநாட்டில் பணி புரிபவர்களிடமிருந்து 2025, ஜூன் மாதத்தில் இலங்கைக்கு 635.7 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 22% அதிகமாகும்.
ஜனவரி முதல் ஜூன் 2025 வரையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்தமாக 3.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அனுப்பப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 18.9% அதிகமாகும் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கான மொத்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு தரப்பினர் மூலம் 6.57 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்த ஆண்டில் 312,836 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளனர் என அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.