சுற்றுலாவுக்காக நாட்டிற்கு வந்த இரண்டு வெளிநாட்டுப் பெண்களிடம் இருந்து அதிகமாக பணம் பறித்ததாகக் கூறி இரண்டு முச்சக்கர வண்டி சாரதிகள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இம்புல்கொட மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்த 40 மற்றும் 48 வயதுடையவர்களே அவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சுற்றுலா பயணிகளான இரண்டு பிரேசில் மற்றும் பெல்ஜியப் பெண்களிடமிருந்து 10,000 ரூபாவுக்கு பதிலாக 30,000 ரூபாய் பணம் பெற்றுள்ளனர்.
இது தொடர்பாக பொலிஸ் சுற்றுலாப் பிரிவுக்கு கிடைத்த இரண்டு முறைப்பாடுகளுக்கமைய நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, சந்தேகத்திற்குரிய இரண்டு முச்சக்கர வண்டி சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரையும் மேலதிக விசாரணைக்காக குருந்துவத்த மற்றும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையங்களில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.