பிலியந்தலை தேசிய பாடசாலையில் கல்விகற்கும் மாணவனொருவன் வெள்ளை வானில் வந்த ஒரு குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தரம் 11இல் கற்கும் மாணவன் நேற்றுமுன்தினம் (16) மாலை 4.00 மணியளவில் பிரத்தியேக வகுப்புக்குச் செல்வதற்காக சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
மேலும், கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 15 வயது மாணவன் இரத்தினபுரி பகுதியில் வெள்ளை வானிலிருந்து குதித்து தப்பிச் சென்றுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கஹதுடுவ பொலிஸார் வானையும் சிறுவனை கடத்தியதாகக் கூறப்படும் நபர்களையும் கைதுசெய்வதற்காக விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.