உடபுஸ்ஸலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுங்காயங்களுக்குள்ளாகியதாக உடபுஸ்ஸலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.நுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் டெல்மார் பகுதியில் இவ்விபத்து 17.11.2018 அன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இராகலையிலிருந்து உடபுஸ்ஸலாவ பகுதியை நோக்கி சென்ற வேன் ஒன்றும், உடபுஸ்ஸலாவ பகுதியிலிருந்து இராகலை பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியும் நேர்க்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவருமே பலத்த காயங்களுக்குள்ளாகி டெல்மார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இவ்விபத்தினால் சில மணி நேரம் அவ்வீதியினூடான போக்குவரத்து தாமதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை உடபுஸ்ஸலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
க.கிஷாந்தன்